WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 9, 2016

சிபிஎஸ்இ-க்கும் மாநிலங்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தை பரிந்துரைக்கவில்லை: மக்களவையில் அமைச்சர் பதில்


புதிய கல்வி கொள்கை சர்ச்சை குறித்து, மக்களவையில் நேற்று உறுப்பினர்கள் பலர் கேள்விகள் எழுப்பினர். பூஜ்ய நேரத்தில் துணை கேள்விகளுக்கு மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திரா குஷ்வாகா பதில்
அளித்து பேசியதாவது: நாடு முழுவதும் ஒரே பாடத் திட்டம் என்ற நோக்கில் தேசிய புதிய கல்வி கொள்கை பரிந்துரைக் கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட வரலாறு, அரசியலமைப்பு வரலாறு, இந்திய தேசிய அடையாளமாக கருதப்படும் முக்கிய நிகழ்வுகள் போன்வற்றை உள்ளடக்கியதுதான் புதிய கல்வி கொள்கை. இந்த தேசிய கல்விக் கொள்கையை சில மாநிலங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இவ்வாறு உபேந்திரா கூறினார். மற்றொரு துணை கேள்விக்கு உபேந்திரா பதில் அளிக்கும்போது, ‘‘பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது’’ என்றார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘பன்முக பாடத்திட்டம், கல்வி தொடர்பான ஆதாரங்கள் விரும்பத்தக்கனவாக உள்ளன. அதேநேரத்தில் உள்ளூர் விஷயங் கள், கலாச்சாரம், மொழி ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை. எனவே, சிபிஎஸ்இ-க்கும் மாநில பாடத்திட்டங்களும் ஒரே கல்வி கொள்கை கொண்டு வரு வதற்கு பரிந்துரைக்கப்படவில்லை’’ என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.