WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 27, 2018

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் கிடையாது.

''பகுதி நேர சிறப்பாசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை மாவட்டங்களில் செயல்படும், நுாறு நுாலகங்களில், 'வை -பை' வசதி ஏற்படுத்த, ஏ.சி.டி., நிறுவனத்துடன், பள்ளி கல்வித்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமை செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானது.ஒப்பந்தப்படி, ஏ.சி.டி., நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு, இலவசமாக நுாலகங்களில், 'வை - பை' வசதியை வழங்கும். வை - பை வசதி ஏற்படுத்தப்படும் நுாலகங்களில், மாணவர்கள், தங்கள் அலைபேசிகளில் நுால்களை பதிவிறக்கம் செய்து படிக்க இயலும்.இதுகுறித்து, அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, வாரத்திற்கு மூன்று நாட்கள், இரண்டு மணி நேரம் மட்டுமே, பணி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி திட்ட நிதியிலிருந்து, 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது, 7,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.அவர்கள் விரும்பும் இடங்களுக்கு, பணி மாறுதல் வழங்கப்படுகிறது. அவர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. பணி அமர்த்தும் போதே, பணி நிரந்தரம் செய்யப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.