WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 12, 2024

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்.

 



தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ல் தொடங்கிஏப்ரல் 8-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 9.1லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, இன்று (ஏப்.12) முதல் தொடங்க உள்ளது.



இது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகள் இன்றுதொடங்கி ஏப்.22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம்உள்ளிட்ட செயல்பாடுகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10-ல்வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.