WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 7, 2015

பிளஸ்–2 வேதியியல் வினாத்தாளில் பிழை: இரண்டு 1 மார்க் வினாவிற்கு எந்த விடை எழுதினாலும் மதிப்பெண்.

பிளஸ்–2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து
தெரிவித்து இருந்தனர். ஒரு மதிப்பெண் வினா பகுதியில் 2 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதால் மாணவ – மாணவிகள் ஒரு மதிப்பெண் பகுதியில் 30 மார்க் ‘‘சுளை’’யாக எடுக்க முடியாமல் போய் விட்டதே என்று கலங்கினார்கள். வினா எண் 10 மற்றும் 22 ஆகிய இரண்டு விடைகளிலும் பிழைகள் இருந்ததால் மாணவர்கள் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அந்த வினாக்களுக்கு சரியான விடை எது என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் அடைந்தனர். இதனால் பெரும்பாலான மாணவர்கள் அந்த இரண்டு கேள்விகளுக்கான விடைகளை எழுத தெரியாமல் திணறினார்கள். சிலர் அதற்கு முயற்சி செய்தனர். பலர் அதற்கு கொடுக்கப்பட்ட 4 விடைகளில் எதையாவது ஒன்றை எழுதி வைத்து விட்டு வந்தனர். இதனால் வேதியியல் தேர்வில் 2 மதிப்பெண் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற மாணவர் கருதினர். வேதியியல் தேர்வில் கேட்கப்பட்ட தவறான வினாக்களுக்கு விடை அளிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து துறை அதிகாரிகள் மற்றும் வினாத்தாள் தயாரித்த மூத்த ஆசிரியர்களிடம் ஆராயப்பட்டது. தவறாக மற்றும் பிழையாக கேட்கப்பட்ட இரண்டு ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தவறாக கேட்கப்பட்ட 10 மற்றும் 22 ஆகிய ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு எந்த விடை எழுதி இருந்தாலும் மதிப்பெண் கொடுக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் கு.தேவராஜனிடம் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:– வேதியியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 10 மற்றும் 22 ஆகிய வினாக்கள் பிழையாக கேட்கப்பட்டதால் அந்த வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். தவறான அந்த வினாவிற்கு 4 விடைகளில் ஏதாவது ஒன்றை எழுதினாலும் அதற்கு மதிப்பெண் வழங்கப்படும். விடை எழுத முயற்சி செய்தால் மதிப்பெண் கிடைக்காது. வினா எண்ணை எழுதினாலோ, விடைக்கான முயற்சி செய்தாலே மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது. 4 விடைகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் எழுதி இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு மதிப்பெண் வீதம் இரண்டு வினாக்களுக்கு 2 மார்க் வழங்கப்படும். இவ்வாறு கு.தேவராசன் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.