பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது
அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற செப்.,02 அன்று காலை 10.00 மணி முதல் செப்.,09 வரை தாங்கள், தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், செப்.,09க்கு பிறகு சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
நடைபெற்று முடிந்த ஜூன்/ஜூலை 2015 10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 24.07.2015 அன்று முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத்தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 20.10.2015 வரை மட்டுமே செல்லத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.