தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, நாளை துவங்கி, ஏப்ரல், 13ல் முடிகிறது; 10,72,210 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையினர் மற்றும் நிலையான படையினர், மாநிலம் முழுவதும் தேர்வு அறையில் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளனர். கடந்தாண்டு, ஆங்கிலம் வினாத்தாளில் பல பிழைகள் இருந்தன. இந்த ஆண்டு வினாத்தாள் பிழைகள் இல்லாமல் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போல், கடந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் ஏராளமானோர், சென்டம் எடுத்தனர். அதை கட்டுப்படுத்த, இந்த ஆண்டு அறிவியல் வினாத்தாள் கடினமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச், 4ல் பிளஸ் 2பொதுத்தேர்வு துவங்கியது. மொழிப்பாட தேர்வுகள் முடிந்து, இன்று முதல், முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்க உள்ளன.
மேலும் இன்று முதல், விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. முதல் நாளான இன்று,விடைத்தாள் திருத்துவதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். மார்ச், 16 முதல், விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்குகிறது. தேர்வுகள் முடிய முடிய, அந்தந்த பாடங்களுக்கு விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.
10ம் வகுப்பு தேர்வு விவரம்
மார்ச் -15 : தமிழ் மொழித்தாள்- 1
மார்ச் -16 : தமிழ் மொழித்தாள்- 2
மார்ச்- 22 : ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் - 29 : ஆங்கிலம் 2ம் தாள்
ஏப்ரல் -4 : கணிதம்
ஏப்ரல் -7 : அறிவியல்
ஏப்ரல் -11 : சமூக அறிவியல்
ஏப்ரல்- 13 : விருப்ப பாடம்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.