WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 7, 2017

பிளஸ் 2 துணை தேர்வுக்கு ’தத்கலில்’ விண்ணப்பிக்கலாம்.

’பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி
பெறாதோருக்காவும், 10ம் வகுப்பு முடித்து, நேரடியாக தனித்தேர்வாக எழுதவும், செப்., இறுதியில் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பங்கேற்க விரும்புவோரிடம், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த கால அவகாசத்தில் விண்ணப்பிக்காதவர்கள், ’தத்கல்’ என்ற சிறப்பு அனுமதி திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவித்துள்ளார். விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்டங்களில் உள்ள, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களில், நாளை முதல், இரண்டு நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு, சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும். கூடுதல் விபரங்களை, அரசு தேர்வுத் துறை சேவை மையங்களில் தெரிந்து கொள்ளலாம். சேவை மைய முகவரிகள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.