WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 1, 2024

கல்வி உதவித்தொகை பணிகளை முடிக்காத தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.

கல்வி உதவித்தொகை பெறும்மாணவர்களின் விவரங்களை வழங்காத பள்ளி தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட் டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப் பதாவது:

இணையதளத்தில் பதிவேற்றம்: தமிழகத்தில் கல்வி உதவித் தொகை பெறும் பிசி, எம்பிசி மற்றும் டிஎன்சி மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளை இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு சில பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தகைய தலைமை ஆசிரியர்கள் மீது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை பெறும்மாணவ, மாணவிகளின் ஆதார் விவரம் வங்கிக் கணக்குகளுடன்இணைக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில் மாணவர்களின் ஆதார் எண் உட்பட அடிப்படை தகவல்கள் இன்னும் பதிவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், இல்லம் தேடிக் கல்விதன்னார்வலர்கள் இந்த பணிகளைவிரைந்து முடிக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுசார்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.