WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 17, 2024

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு மே 25 வரை விண்ணப்பிக்கலாம்.

 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை பள்ளிக்கல்வித் துறை மே 25-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும், பொது மாறுதலில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் ஜூன் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மாறுதல் பெற விருப்பமுள்ள ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொது மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு மே 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேலான ஆசிரியர்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே மாறுதல் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் (மே 17) நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கஇதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது மாறுதல் கலந்தாய்வுக்கு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆசிரியர்கள் மிகுந்த ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். அதேபோல், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். அவ்வாறு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் போது எமிஸ் தளத்தில் தொழில்நுட்பக் கோளாறும் ஏற்பட்டது.ப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசமானது மே 25-ம் தேதி வரை ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும். அதேபோல், பொது மாறுதலில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் கட்டாயம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தளர்த்தப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம். என்று அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.