தொடக்கக் கல்வி பிரிவின் புதிய இயக்குனராக நரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித் துறையில் நேற்று முன்தினம், ஒன்பது இணை இயக்குனர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டது. நேற்று, நான்கு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அரசு தேர்வுத் துறை இடைநிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த நரேஷ் பதவி உயர்வு பெற்று, தொடக்க கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா, அரசு தேர்வுத் துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் உமா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராகவும், தொடக்க கல்வி இயக்குனராக இருந்த சேதுராம வர்மா, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.