WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 20, 2024

அக்.28 முதல் நவ.2 வரை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி.


தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 28 முதல் நவம்பர் 2-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் திட்ட பாடப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி மாநில கருத்தாளர்களுக்கு அக்டோபர் 22, 23-ம் தேதிகளில் இணைய வழியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாவட்டக் கருத்தாளர்களுக்கு அக்டோபர் 24, 25-ம் தேதிகளில் நேரடியாக பயிற்சி வழங்கப்படும். தொடர்ந்து மாவட்டக் கருத்தாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றியத்தில் அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், நவம்பர் 4, 5-ம் தேதிகளில் 4, 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப் பொருள் கற்பிப்பது சார்ந்து எழும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.