ஆசிரியர் பணித் தகுதிக்கான டெட் தேர்வின் 2 வினாத்தாள்களும் எளிமையாக இருந்ததால் இந்த முறை தேர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பட்டதாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஆர்பி கடந்த ஆக.11-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கிடையே பணியிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், டெட் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1-ம் தேதி உத்தரவிட்டது. இதன் காரணமாக டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அதன்படி டெட் முதல் தாள் தேர்வுக்கு, 1 லட்சத்து 7,370 பேரும் 2-ம் தாள்தேர்வுக்கு 3 லட்சத்து 73,438 பேரும் என மொத்தம் 4 லட்சத்து 80,808 பேர் விண்ணப்பித்தனர்.
இதற்கிடையே முதல் தாள் போல் 2-ம் தாள் தேர்வும் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் இந்த முறை டெட் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்விரு தேர்வுகளின் முடிவுகளை துரிதமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.