தமிழ்நாட்டில் பள்ளி படிப்பை முடித்து, மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் வண்ணம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில் மாநிலத்தில் பல்வேறு பகுதியில் இருந்து கல்வியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து நிதி உதவு அளிக்கும் வண்ணம், தேசிய திறனறித் தேர்வு, ஊரக மாணவர்கள் திறனறித் தேர்வு, தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, முதலமைச்சர் திறனறித் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு, ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2025-26 கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் மாணவர்களின் நலன் காத்து பல்வேறு திட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. அதில் காலை உணவு திட்டம், புதுமை பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில், தேசிய அளவில் பேசப்படும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இவைமட்டுமின்றி நான் முதல்வன் திட்டத்தின் உயர்கல்வி வழிகாட்டுதல், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி, மாணவர்களின் திறன் வளர்ச்சி உள்ளிட்ட முன்னெடுப்புகள் எடுக்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை தேர்வுகள்:
அந்த வரிசையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் நடத்தப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களும் அடங்கும். கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், உயர்கல்வியில் சேரும் வகையில், திறனறித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படுகிறது. தேசிய திறனறித் தேர்வு, முதலமைச்சர் திறனறித் தேர்வு, தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு ஆகியவை மாநில அளவில் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளும் விதமாக நடத்தப்படுகிறது.
இவைமட்டுமின்றி, ஊரக பகுதிகளில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வை கடந்த 1991-92 கல்வி ஆண்டு முதல் நடத்தி வருகிறது.
தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் கிராமப் பஞ்சாயத்து மற்றும் TOWNSHIP அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வை எழுதலாம். இந்த மாணவர்கள் 8-ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2025-26 கல்வி ஆண்டில் தற்போது பள்ளிகளில் பயின்று வரும் 9ஆம் வகுப்பு மாணவர்களின் இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் இருந்து 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் இடம்பெறுவார்கள். சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இதில் பங்குகேற்கக்கூடாது.
ரூ.1000 கல்வி உதவித்தொகை
ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.1000 ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும். 9 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 4 வருடத்திற்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இத்தேர்விற்கு மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தை நிரப்பி, பள்ளிகளின் வழியாகவே விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, மாணவர்கள் இதற்கான தேர்வு கட்டணமாக ரூ.10 சேர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வரும் நிலையில், நவம்பர் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்விக்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் உள்ளன. இதற்கான தேர்வு நவம்பர் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வின் பின்பு, உத்தேச விடைக்குறிப்பு வெளியிடப்படும். தொடர்ந்து, விடைத்தாள் மதிப்பீடு செய்து, இறுதி விடைக்குறிப்பு மற்றும் முடிவுகள் வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.