WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 28, 2026

தமிழக அரசின் மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வழிகாட்டுதல்.

 

அரசு மாதிரிப் பள்​ளி​களில் வரும் கல்​வி​யாண்​டுக்​கான (2026-27) மாணவர் சேர்க்கை பிப்​ர​வரி மாதம் நடை​பெறவுள்ள நிலை​யில், அதற்​கான வழி​காட்​டு​தல்​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளன.

தமிழகத்​தில் அரசுப் பள்ளி மாணவர்​களின் தரத்தை உயர்த்த, 2021-22-ம் கல்​வி​யாண்​டில் மாதிரிப் பள்​ளி​கள் திட்​டம் தொடங்​கப்​பட்​டது. தற்​போது மாவட்​டத்​துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்​தம் 38 மாதிரிப் பள்​ளி​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

இங்கு பவ்​வேறு வித​மான கட்​டமைப்பு வசதி​கள் மற்​றும் போட்​டித் தேர்​வு​களுக்​கான சிறப்​புப் பயிற்​சிகளை வழங்கி உயர்​கல்​வி​யில் மாணவர் சேர்க்கை ஊக்​குவிக்​கப்​படு​கிறது. அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்களில் தகு​தி​யான மாணவர்கள் தேர்வு செய்​யப்​பட்டு இந்த மாதிரிப் பள்​ளி​களில் சேர்க்​கப்​படு​கின்​றனர்.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்வி இயக்​குநரகம் சார்​பில் அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்கை விவரம்: அரசு மாதிரிப் பள்​ளிகளில் 2026-27-ம் கல்​வி​யாண்டுக்​கான மாணவர் சேர்க்கை 9, 10-ம் வகுப்பு​களுக்கு பிப்​ர​வரிமாத​மும், 11-ம் வகுப்​புக்கு மே மாத​மும் நடை​பெறும்.

எனவே, முதன்​மைக் கல்வி அலு​வலர் தலை​மை​யில் தலைமை ஆசிரியர்​கள், மாவட்ட, வட்​டாரக் கல்வி அலு​வலர்​கள் ஆகியோரை கொண்டு இதற்​கான முன்​னோட்ட கூட்​டத்தை நடத்த வேண்டும்.

பிப்​ர​வரி 2-ம் வாரத்​தில் மாதிரிப் பள்​ளி​களில் 9, 10-ம் வகுப்​பு​களுக்கு தேர்ந்​தெடுக்​கப்​படும் மாணவர் பட்​டியல் வெளி​யிடப்​படும். அதன்​பின் முதன்​மைக் கல்வி அலு​வலர் உடனே மாவட்ட ஆட்​சி​யர் ஒப்​புதலைப் பெற்று அவர் தலை​மை​யில் மாணவர்​களின் பெற்​றோர், தலைமை ஆசிரியர்​கள் ஆகியோ​ருக்கு கூட்​டங்​கள் நடத்த வேண்​டும்.

இந்​தப் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட ஒரு வாரத்​தில் மாணவர் சேர்க்​கையை உறு​திப்​படுத்த வேண்​டும். இந்த அறி​வுரைகளைப் பின்​பற்றி அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களில் தேர்ந்​தெடுக்​கப்​பட்​ட​வர்​களை மாவட்ட மா​திரிப் பள்​ளி​களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.