WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 22, 2026

அரசு பள்ளிகளில் 44,000 மாணவர்கள் சேர்ப்பு.

 

தமிழக அரசு பள்ளிகளில், 4.3 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு புதிதாக சேர்ந்தனர். இந்தாண்டு, ஐந்து லட்சம் மாணவர்களை சேர்க்க, தொடக்கக் கல்வி துறையின் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதை நிறைவேற்றும் வகையில், வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் துவங்கும் மாணவர் சேர்க்கையை, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளில் மார்ச் 2ம் தேதியே துவக்கினர்.

இதையடுத்து, 5 வயது பூர்த்தியான குழந்தைகள் பற்றிய விபரங்களை, அங்கன்வாடிகளில் சேகரித்துள்ள ஆசிரியர்கள், அவர்களை வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்த்துள்ளனர். இதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த 20 நாட்களில், 44,396 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.