அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேருவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஎட் படிப்பில் 2,040 இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன உள்ளன.
இந்நிலையில், 2026-2027-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 5,900 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.
எனினும் அவர்களில் 3,036 பேர் மட்டுமே விண்ணப்பத்திற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை முழுமை செய்திருந்தனர். அவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்பட்டது.
தரவரிசையில் இடம்பெற்றுள்ள மாணவர்கள் விருப்பமான கல்லூரியை தேர்வுசெய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி கல்வி ஆணையரகம் அறிவித்திருந்தது.
அதன்படி ஆன்லைன் கலந்தாய்வு 4-ம் தேதி (செவ்வாய்) தொடங்குகிறது. இக்கலந்தாய்வு 10-ம் தேதி முடிவடைந்ததும் மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 14-ம் தேதி அன்று ஆன்லைனில் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் ஆன்லைன் விண்ணப்ப ஐடி-யை பயன்படுத்தி www.twise.ac.in என்ற இணையதளத்தில் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்வியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 17 முதல் 21-ம் தேதிக்குள் சேர்நதுவிட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி ஆணையரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.