கோவை : மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி.,
குரூப்1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகின்றன.
ஜூலை 20ல் நடக்கவுள்ள, குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், இன்று முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.
மாலை 3.00 - 6.00 மணி வரை நடக்கும் இப்பயிற்சியில், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், வல்லுனர்கள் பயிற்சி அளிப்பர். தொடர்ந்து, பொதுஅறிவு, அரசியல் அறிவியல், கணிதம், தற்போதைய சாதனைகள் என பல தலைப்புகளில் பயிற்சி நடக்கிறது.
பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், இன்று மாலை 3.00 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து வகுப்பில் கலந்து கொள்ளலாம். பெயரை பதிவு செய்ய வரும் மக்கள், குரூப்1 தேர்வுக்கு விண்ணப்பித்த படிவத்தின் நகல்களும், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களையும் எடுத்து செல்லுதல் அவசியம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.