WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 7, 2014

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள்: இணையதளத்தில் நாளை வெளியீடு!

பத்தாம் வகுப்பு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் நாளை(ஜூலை 8) வெளியிடப்பட உள்ளன.
இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம்  வெளியிட்ட அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிட்ட பிறகு மறுகூட்டல் கோரியவர்களின் விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டன.
இதில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் students.sslc14rt.in  என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு வெளியிடப்படும்.இந்தப் பட்டியலில் இல்லாத மாணவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.மதிப்பெண்களில் மாற்றம் உள்ள ஜூலை 9 முதல் 11 வரை தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Speed education &employment news visits at www.kalvikkuyil.blogspot.com

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.