WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 9, 2015

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு: இன்று நடைபெறுகிறது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது. இதற்கான தகவலை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு:

மத்திய செயலகப் பணி, ஆயுதப் படை, ரயில்வே, வெளியுறவுத் துறை அமைச்சகங்களில் உதவியாளர், அஞ்சல் துறையின் ஆய்வாளர், கணக்கு தணிக்கையாளர், கணக்கைளர், இளநிலை கணக்காளர், வரித்துறையில் உதவியாளர் போன்ற பணிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.

தென் மண்டலத்தில் சுமார் 4 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கு கொள்கின்றனர். 12 நகரங்களில் 236 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வு காலை, மாலை ஆகிய இருவேளைகளில் நடைபெறுகிறது.

தேர்வுக்குத் தகுதியான நபர்களுக்கு, அனுமதிச் சான்று, அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.sscsr.gov.in) இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.