WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 15, 2016

கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: யுஜிசி புதிய அறிவிப்பு.

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைகளை பெற ஆதார் எண் கட்டாயமில்லை என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. மத்திய அரசு ஆதார் எண்ணை அறிமுகம் செய்ததோடு, அனைத்துத் திட்டங்களுக்கும் அதை கட்டாயமாக்க முனைந்தது. அதனைத் தொடர்ந்து அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் மானியத் திட்டங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட முக்கியத் திட்டங்களுக்கு மட்டும் ஆதார் எண் முறையை நடைமுறைப்படுத்தலாம் என உத்தரவிட்டது. இருந்தபோதும், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஊதியம், சிறப்பு ஓய்வூதியம் என்பன உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை மத்திய, மாநில அரசுகள் கட்டாயமாக்கியுள்ளன. இதுபோல், யுஜிசி சார்பில் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைத் திட்டங்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில், யுஜிசி புதன்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "மாணவர்களுக்கு ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை இல்லை என்பதற்காக மத்திய அரசு கல்வி உதவித் தொகைகள் மறுக்கப்படமாட்டாது எனவும், அதற்குப் பதிலாக மாணவர்கள் வேறு ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட அத்தாட்சியை சமர்ப்பிக்க வேண்டும்' எனவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம், ஆதார் அட்டையை பெறாத மாணவர்களும் கல்வி உதவித் தொகைகளை பெற வழி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.