''அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்
கூட்டணியை அழைத்து பேசாதது கண் டனத்திற்கு உரியது,'' என சங்க மாநிலத் தலைவர் மோசஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கடந்த 2003ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் 'தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. பின், காங்., ஆட்சியில் 2011ல் சட்டமாக இயற்றப்பட்டது.
இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி 16 பேராட்டங்களை நடத்தி உள்ளோம். எங்களிடம் விவாதம் நடத்தாமல் மற்ற சங்கங்களை அழைத்துப் பேச அரசு நினைப்பது பழிவாங்கும்
நடவடிக்கை. இது, கண்டனத்துக்கு உரியது, என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.