மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின்படி, இந்த ஆண்டு ஆறாம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை அமலாகி உள்ளது.
அதற்கேற்ப, மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ், இந்திய மொழிகளின் மத்திய நிறுவனமான சி.ஐ.ஐ.எல்., அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, 150 ரூபாய் கட்டணத்தில், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள, ஏதேனும் ஒரு இந்திய மொழியில், டிப்ளமோ படிப்பை கற்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.
விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு, வரும் ஜூலை 6ம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்கும். இதற்காக ஏழு இடங்களில் செயல்படும் மண்டல மையங்களில், மூன்றாவது மொழி கற்பிக்கப்பட உள்ளது.
மைசூரில் உள்ள கல்வி மையத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட உள்ளன. இந்த தகவலை, இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் சி.ஐ.ஐ.எல்., சார்பில், தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.