அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர,
ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, மே, 1ல் துவங்கியது; வரும், 31ல் முடிகிறது.
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதால், 'கட் ஆப்' குறித்து, மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதை நீக்கும் வகையில், கடந்த ஆண்டு எந்த கல்லுாரியில், எவ்வளவு, 'கட் ஆப்' மதிப்பெண்ணில், மாணவர் சேர்க்கை நடந்தது என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லுாரிகளின் கடந்த ஆண்டு, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, cutoff.tnea.ac.in அல்லது www.tnea.ac.in இணையதளங்களில் அறியலாம். நேற்று வரை, கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.20 லட்சத்துக்கும் மேலான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.