WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 26, 2017

விழுப்புரம், ராமநாதபுரம் தர்மபுரியில் சட்ட கல்லூரிகள்.

விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரத்தில், புதிதாக அரசு சட்டக் கல்லுாரிகள் துவக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ், ஏழு அரசு சட்டக் கல்லுாரி களும், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லுாரியும், இயங்கி வருகின்றன. மேலும், விழுப்புரம், தர்மபுரி மற்றும் ராமநாதபுரத்தில், புதிதாக மூன்று சட்டக் கல்லுாரிகள், 2017 - 18ம் கல்வியாண்டில் துவக்கப்படும்.

இப்புதிய சட்டக் கல்லுாரிகளில், 2017 - 18ம் கல்வியாண்டு முதல், மூன்றாண்டு படிப்பிற்கு, முதல் ஆண்டில், 80 மாணவர்களும், ஐந்தாண்டு படிப்பிற்கு, 80 மாணவர்களும், அம்பேத்கர் சட்டப் பல்கலை வாயிலாக சேர்க்கப்படுவர்.ஆசிரியர்கள் மற்றும் இதர தேவைக்கு, தலா, 2.27 கோடி ரூபாய் வீதம், மூன்று கல்லுாரிகளுக்கு, 6.81 கோடி ரூபாய் செலவிடப்படும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.