கிராமங்களில், மின் வசதி இல்லாத பள்ளிகள் குறித்த அறிக்கை வழங்குமாறு, தமிழக அரசை, மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு, நாடு முழுவதும், தடையில்லாமல் மின்சாரம் வழங்க, தீன்தயாள் மற்றும் ஒருங்கிணைந்த மின் திட்டங்களை துவக்கியுள்ளது.
உத்தேச அறிக்கை : அதன்படி, தீன்தயாள் திட்ட பணிகள், கிராமங்களிலும், ஒருங்கிணைந்த திட்ட பணிகள், நகரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளில், மின் வசதி இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, அவை தொடர்பான விபரத்தை வழங்குமாறு, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, மத்திய மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீன்தயாள் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகம், சமூக நலக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு, 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டு
உள்ளது. ஆனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கிய, 2015 - 16 உத்தேச அறிக்கையின் படி, இந்திய கிராமங்களில் உள்ள, 12.37 லட்சம் தொடக்கப்பள்ளிகளில், 7.07 லட்சம் பள்ளிகளில் மட்டும் மின் வசதி உள்ளது. தமிழகத்தில், 439 தொடக்கப் பள்ளி உட்பட, நாடு முழுவதும், 5.29 லட்சம் பள்ளிகளில், மின் வசதி கிடையாது என்ற, தகவல் கிடைத்துள்ளது.
நடவடிக்கை : எனவே, தற்போதைய நிலவரப்படி, கிராம பள்ளி களில் உள்ள மின் வசதி குறித்து, அறிக்கை தருமாறு, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, கடிதம் எழுதப்பட்டுள்ளது. அவற்றின் அடிப்படையில், அனைத்து பள்ளிகளுக்கும், மின் வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் மின் வசதி இல்லாத கிராமங்களும் இல்லை; பள்ளிகளும் இல்லை. அந்த விபரம், தமிழக அரசு சார்பில், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.