பிளஸ் 2 பொதுத்தேர்வில், 'ரேங்கிங்' முறை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து,
தேர்வில் சாதித்த பள்ளிகளின் பட்டியலை, முதன் முதலாக, பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியாகும். குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, பெற்றோர், உறவினர்களால் கண்டிப்புகள் இருக்கும். இதனால், பல மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவதுடன், விரும்பத்தகாத சம்பவங்களும் நடக்கும். இதற்கு, இந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது; 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவர்களின் மதிப்பெண்ணை வைத்து, வணிக ரீதியில் செயல்படும் பள்ளிகளுக்கும், 'செக்' வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பதிலாக, சாதித்த பள்ளிகளின் விபரங்களை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், எந்த குறிப்பிட்ட பள்ளிக்கும் முன்னுரிமை கொடுக்கப்படவில்லை.தேர்வில் பங்கேற்ற, 6,700 பள்ளிகளிலும் தேர்வு எழுதிய மாணவர் எண்ணிக்கை; பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்கள்; 'சென்டம்' பெற்றவர்கள் எண்ணிக்கை; பள்ளியின் சராசரி தேர்ச்சி ஆகியன இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம், எந்த பள்ளியில் மாணவர்கள், அதிக அளவில் மதிப்பெண் பெற்றுள்ளனர்; குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்; தேர்ச்சி பெற்றவர்கள் யார்; நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எவை என, அனைத்து விபரங்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.