மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், மார்ச்சில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 28ல் வெளியானது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த தேர்வில், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு தேர்விலும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதும், 8.8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்வு முடிவுகள், நேற்று வெளியாவதாக இருந்தது; ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. எனவே, நாளை தேர்வு முடிவு வெளியாகும் வாய்ப்பு உள்ளது. அதிலும் தாமதம் ஏற்பட்டால், ஜூன், 4ல் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேர்வு முடிவுகளை, www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.