Friday, June 2, 2017
பிளஸ் 1 பொதுத்தேர்வு தனி தேர்வர்களுக்கு உண்டா?
பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கட்டாயம்' என, அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தனித்தேர்வர்களுக்கு தேர்வு உண்டா என்பது குறித்து, அரசாணையில் கூறப்படாததால், அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தமிழகத்தில், பள்ளிக்கல்வித் துறையில் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில், பிளஸ் 1க்கு, பொதுத்தேர்வு கட்டாயம் என்பதற்கான, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், பிளஸ் 1 பாடத்தை சரியாக நடத்த வில்லை என்பதால், பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை, 10ம் வகுப்பு மட்டும் முடித்து, பிளஸ் 2 தேர்வை எழுதும், தனித்தேர்வர்கள், பிளஸ் 1 தேர்வையும் எழுத வேண்டுமா என்பது குறித்து, தமிழக அரசு தெரிவிக்கவில்லை. பிளஸ் 1 தேர்வையும் எழுத வேண்டும் என்றால், அதற்கான நடைமுறை என்ன என, தெரியாமல், தனித்தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.