பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி
இயக்குனர், இளங்கோவன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரையாண்டு தேர்வை, டிச., 7ல், துவங்கி, 23ல் முடிக்க வேண்டும். 10ம் வகுப்புக்கு, டிச., 11ல் தேர்வு துவங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2க்கு, டிச., 7ல் தேர்வுகள் துவங்கும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கான தேர்வு, காலை, 10 மணி முதல், பகல், 12.15 மணி வரையும், பிளஸ் 2க்கு, காலை, 10 மணி முதல் பகல், 1.15 வரையும் நடைபெறும். 24ம் தேதி முதல் விடுமுறை விடப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.