WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 27, 2018

1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு அரசாணை.


tngov


6 மாத ஒப்பந்த அடிப்படையில் 1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.




பள்ளிக் கல்வித் துறையில் பகுதிநேர ஆசிரியர் என்பது இரண்டு முறையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று சிறப்பாசிரியர்கள். பகுதி நேர ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் சிறப்பாசிரியர்கள் 16 ஆயிரத்து 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டனர். அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு வழங்கியுள்ள நிதி மூலம் முதல் கட்டமாக மாத ஊதியமாக ரூ.5,000 வழங்கப்பட்டது. பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு வாரத்துக்கு மூன்று நாள்கள் இரண்டு மணி நேரம் பணி செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து கூடுதலாக சம்பள உயர்வு வேண்டும் எனக் கேட்டபோது படிப்படியாக உயர்த்தி தற்போது மாதம் ரூ. 7,700 வழங்கப்பட்டு வருகிறது. பகுதி நேரத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் விரும்பும் இடங்களுக்கு பணிமாறுதல் செய்துகொள்ள அவர்கள் இடம்பெற்றுள்ள சங்கங்களின் மூலமாக மனு அளிக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறோம். அந்தப் பணிகள் நிறைவு பெறும் சூழ்நிலையில் உள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. ஏனெனில் இதற்கு மத்திய அரசு நிதி தருகிறது. இவர்களை பணியில் அமர்த்தும்போது பணி நிரந்தம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறித்தான் 8 ஆண்டுகளுக்கு முன்னர் பணி வழங்கப்பட்டது. தற்போது உள்ள நிதி நிலையின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. போராட்டம் நடத்துபவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தற்போதுள்ள நிலையை அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முறையாக ஆசிரியர் காலிப்பபணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், 11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக, 6 மாத ஒப்பந்தகால அடிப்படையில் 1,474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், புதிதாக நியமிக்கப்படும் தற்காலிக முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசு தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.