WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 30, 2018

உதவி பேராசிரியர் பணி : டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு.

சட்ட கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வுக்கான தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.அரசு சட்ட கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 186 காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக, இந்தாண்டு, ஜூலை, 18ல் நியமன அறிவிக்கை வெளியானது. இதற்கான போட்டி தேர்வுக்கு, ஆக., 6 வரை ஆன்லைனில் விண்ணப்ப பதிவு முடிந்தது. ஆனால், டி.ஆர்.பி.,யில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களால், தேர்வை அறிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி, ஒரு வாரத்திற்கு முன் வெளியானது. இதையடுத்து, உதவி பேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு, அக்., 14 முதல், 17 வரை தேர்வு நடக்கும் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. தேர்வு தேதி விபரங்களை, http://trb.tn.nic.in/law2018 என்ற, இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.