WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 3, 2018

தேர்வு விடுமுறை நிறைவு: இன்று பள்ளிகள் திறப்பு.

காலாண்டு தேர்வு விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன.தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று பருவ தேர்வுகளும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஆண்டு இறுதி பொதுத்தேர்வும் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், முதல் பருவ தேர்வும், காலாண்டு தேர்வும், செப்., 22ல் முடிந்தது. மறுநாள் முதல், தேர்வுக்கு பிந்தைய விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் துவங்க உள்ளன.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் மற்றும், இரண்டாவது ஜோடி சீருடைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், காந்தியடிகளின், 150வது பிறந்த நாள் விழாவும், இன்று கொண்டாடப்பட உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.