தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 83 மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே திருத்துதல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை சார்பில் விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் பகுதியில்உள்ள 33-வது கேள்வி பிழையாகஇருந்ததால் அதற்கு பதில் எழுத முயற்சித்த மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் (3 மதிப்பெண்) வழங்க வேண்டுமெனஅறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.