WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 24, 2024

சம்பளத்தில் வந்த சிக்கல்.. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் போராட்டம்.. தீர்வு எப்போது?

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்வதைக் கண்டித்து போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

களஞ்சியம்‌ 2.0 செயலி வாயிலாக தமிழக அரசு ஊழியர்களின்‌ ஊதியத்தில் தன்னிச்சையாகவும்‌, எந்த ஒரு வரையறையும் இல்லாமலும்‌ வருமானவரி பிடித்தம்‌ செய்யும்‌ நடைமுறையை கைவிடக்‌ கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ வருகிற மே 29ஆம் தேதியன்று புதன்கிழமை மாவட்டக்‌ கருவூலங்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு புதிதாக அறிமுகம்‌ செய்துள்ள களஞ்சியம்‌ 2.0 செயலி வாயிலாக தமிழக அரசு ஊழியர்களின்‌ ஊதியத்திலிருந்து 2024-25 ஆண்டிற்கான வருமான வரியினை தானாக பிடித்தம்‌ செய்யும்‌ நடைமுறையினை கடந்த 2024 ஏப்ரல்‌ மாதம்‌ தமிழக அரசு துவக்கியது. பெரும்பான்மையான ஊழியர்களுக்கு குறிப்பாக, வருமான வரி பிடித்தத்தில்‌ பழைய நடைமுறையை (old regime) தேர்வு செய்தவர்களுக்கு, அவர்களது வரி கழிவுகளை இனவாரியாக எவ்வாறு உள்ளீடு செய்வது என்பது குறித்து தெரிவிக்காமலும்‌, அதற்கான SOP (நடைமுறை) குறித்து ஊதியம்‌ பெற்று வழங்கும்‌ அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்‌ வழங்காமலும்‌, ஊழியர்கள்‌ செலுத்த வேண்டிய வரித்‌ தொகை ஈவை விட கூடுதலான பணத்தினை தன்னிச்சையாக, களஞ்சியம்‌ 2.0 செயலி பிடித்தம்‌ செய்து வருகிறது.

களஞ்சியம்‌ செயலி குறைபாடு உடையது என்பதையும்‌, IFHRMS மென்பொருள்‌ வாயிலாக சம்பள பட்டியலை தயாரிப்பதில்‌ உள்ள ஏராளமான சிரமங்கள்‌ குறித்து கடந்த காலங்களில்‌, பல கடிதங்கள்‌ வாயிலாக நிதித்துறைக்கும்‌, கருவூல கணக்குத்துறை ஆணையாளருக்கும்‌ தெரிவித்துள்ளோம்‌. ஆனால்‌, IFHRMS மென்பொருள்‌ குறைபாடுகள்‌ குறித்து ஊழியர்‌ சங்கங்களின்‌ புகாரினையோ, ஆலோசனைகளையோ தமிழக அரசு கண்டு கொள்ளமாலேயே கடந்து செல்கிறது.

களஞ்சியம்‌ 2.0 செயலி தன்னிச்சையாக ஊழியர்கள்‌ செலுத்த வேண்டிய வருமான வரிக்கான மாதாந்திர ஈவை விட கூடுதலாக வரிப்‌ பிடித்தம்‌ செய்து வருவது குறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள்‌ சங்கம்‌
உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள்‌, கண்டன கடிதங்களை தமிழக அரசிற்கும்‌, கருவூல கணக்குத்‌ துறைக்கும்‌ எழுதியதுடன்‌, தங்களது ஊதியத்தில்‌ பிடித்தம்‌ செய்ய வேண்டிய வருமான வரி ஈவினை முடிவு செய்யும்‌ உரிமையை முன்பு போலவே ஊழியர்களின்‌ விருப்பத்திற்கே விட்டுவிட வேண்டும்‌ என தெரிவித்திருந்தன.
குறைபாடுகள்‌ சரி செய்யப்படும்‌ என அரசு ஊழியர்கள்‌ எதிர்பார்த்திருந்த நிலையில்‌, மீண்டும்‌ 2024 மே மாதத்திற்கான ஊதியம்‌ தயாரிக்கும்‌ போதும் சீரற்ற வருமான வரி ஈவானது பிடித்தம்‌ செய்யப்படுகிறது. தமிழக அரசு ஊழியர்கள்‌ சந்தித்து வரும்‌ சிரமங்கள்‌ குறித்து கடந்த மாதமே கடிதம்‌ வழங்கியிருந்தும்‌, அதை சரி செய்யாமல் இம்மாதமும்‌ அதே நடைமுறையை தொடரும் கருவூல கணக்குத் துறையை கண்டித்தும்‌,
முறையீடுகளுக்காக சந்திக்க வரும்‌ சங்க பிரதிநிதிகளை மட்டுமல்லாது, அனைத்து பார்வையாளர்களையும்‌ தொடர்ந்து சந்திக்க மறுத்து ஆணவத்துடன்‌ செயல்பட்டு வரும்‌ கருவூல கணக்குத்துறை ஆணையாளர்‌ விஜயேந்திர பாண்டியன்‌ IAS அவர்களது ஊழியர்‌ விரோத நடவடிக்கைகளை கண்டித்தும்,

எதிர்வரும்‌ 29.05.2024 புதன்கிழமையன்று மாவட்ட கருவூலத்திற்கு முன்பாகவும்‌, தமிழ்நாடு அரசு ஊழியர்கள்‌ சங்கத்தின்‌ சார்பில்‌ கண்டன ஆர்ப்பாட்டம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.