WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 25, 2024

மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?: பள்ளிக்கல்வி துறைக்கு கோர்ட் கேள்வி.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?' என பள்ளிக்கல்வி துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊதியம் நிர்ணயித்ததை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜூலை 25) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்தது எப்படி?.
தற்போதைய விலைவாசியில் மக்களை பற்றி யோசிக்க மாட்டீர்களா?. குடும்பம் நடத்த ஒரு நாளைக்கு ரூ.200 போதுமா?. இது போன்ற அரசாணைகள் எப்படி பிறப்பிக்கப்படுகின்றன. இது குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.