WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 11, 2024

கல்லுாரி மாறும் மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி தர உத்தரவு.

வேறு கல்லுாரி களுக்கு மாறும் மாணவர்களின் கட்டணத்தை திருப்பித் தர வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


யு.ஜி.சி., செயலர் தலைமையில், இந்த ஆண்டு மே மாதம் நடந்த கூட்டத்தில், விதிகளை பின்பற்றாமல், பல கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கட்டணத்தை திருப்பித் தராமல் அலைக்கழிப்பதாக வந்த புகார்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாணவர்கள் குறிப்பிட்ட கல்லுாரிகளில் சேர்ந்த பின், வேறு கல்லுாரிகளுக்கோ, துறைகளுக்கோ மாறினால், அவர்கள் ஏற்கனவே சேர்க்கைக்கு செலுத்திய கட்டணத்தை, திரும்ப வழங்க, சில வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டு உள்ளன.

இதை, கல்லுாரிகளும், பல்கலைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்றாத கல்வி நிறுவனங்களின் மீது, அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.