அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்களை, அறிவிப்பு பலகையில் ஒட்ட, தமிழக அரசுக்கு மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்களை, பள்ளி அறிவிப்பு பலகையில் ஒட்டியிருக்க வேண்டும் என, ஏற்கனவே மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு, தமிழக பள்ளிக்கல்வித்துறை தரப்பில், மத்திய அரசை அதிகாரிகள் அணுகினர். அப்போது, பல்வேறு வழிகாட்டு முறைகளை பின்பற்ற, மத்திய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்களை, மாணவர் மற்றும் பெற்றோருக்கு தெரியும் வகையில், அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.