ஏழைகள் உயர வழிவகுப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்தை எதிர்ப்பதாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆங்கிலத்தை இனியும் காலனிய எச்சம் என்று கூற முடியாது. அது, உலகளவில் முன்னேற்றத்துக்கான கருவியாகி விட்டது. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல், ஜெர்மனி போன்ற நாடுகள்கூட, ஆங்கிலத்தை கற்பிக்கின்றன.
வளர்ச்சிக்கு அவசியம்
காலனிய மயக்கத்தால் அல்ல, அறிவியல், தொழில்நுட்பம், வணிகத்தில் முன்னணி வகிப்பதற்காக ஆங்கிலம் கற்கின்றனர். மிக வலுவான தேசிய பெருமிதம் உடைய சீனா கூட, ஆங்கிலமானது வளர்ச்சிக்கு அவசியம் என்று கருதுகிறது.
ஆனால், இங்கே அமித் ஷாவும், ஆர்.எஸ்.எஸ்.,சும் ஆங்கிலத்தை மேட்டிமைத்தன அடையாளமாக காட்டுகின்றனர். ஏழைகள், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உயர ஆங்கிலம் வழிவகுக்கிறது என்பதால், அதை எதிர்க்கின்றனர்.
ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததை போல, இப்போது வெகுமக்களுக்கு, ஆங்கிலம் எட்டாக்கனியாக இருக்க வேண்டும் என்று, அவர்கள் விரும்புகின்றனர். இது, மொழியைப் பற்றியது அல்ல; அதிகாரம் பற்றியது.
அஞ்சி நடுங்குவது ஏன்?
தி.மு.க.,வை பொறுத்தவரை, தமிழ் எங்கள் அடையாளம், ஆங்கிலம் வாய்ப்புகளுக்கான வாயிற்கதவு. அதனால்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டும் கற்கக் கிடைக்கிறது. மொழி ஏணியாக இருக்க வேண்டுமே தவிர, அது தடையாக இருக்கக்கூடாது.
அமித் ஷா அஞ்சி நடுங்குவது ஆங்கிலத்தைக் கண்டல்ல; சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் கண்டே, அவர் அஞ்சுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.