சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் பிப். 17-ல் தொடங்கி ஏப். 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு கல்விஆண்டுக்கான பொதுத் தேர் வுக்கு மாணவர்கள் தயாராக ஏதுவாக, தற்காலிக தேதி பட்டியலைசிபிஎஸ்இ கடந்த செப். 2-ம் தேதி வெளியிட்டது.
விரிவான தேர்வுக் கால அட்டவணையை www.cbse.gov.in என்ற இணையதளத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பாகவே அட்டவணை வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புக்கு மட்டும் இந்த கல்வி ஆண்டு முதல் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்ட தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்க உள்ள நிலையில், 2-ம் கட்ட தேர்வுகளை மே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.