WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 11, 2025

அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் பாடத்திட்ட மாற்றம் குறித்து நவ.23, 24-ல் ஆலோசனை.

 


பள்​ளிக்​கல்​வித் துறை​யில் பாடத்​திட்ட மாற்​றம் தொடர்​பான முதல் ஆலோசனைக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலை​மை​யில் நவ. 23, 24-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.



மத்​திய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இதற்கு மாற்​றாக, மாநிலத்​துக்கு என பிரத்​யேக கல்விக் கொள்​கையை வடிவ​மைத்து தமிழக அரசு வெளி​யிட்​டது. இதையடுத்​து, புதிய பாடத்​திட்​டத்தை வடிவ​மைப்​ப​தற்கான வல்​லுநர் குழு மற்​றும் அதை மேற்​பார்​வை​யிட்டு ஒப்​புதல் அளிப்​ப​தற்​கான உயர்​நிலைக் குழு என 2 குழுக்களை பள்​ளிக்​கல்​வித் துறைசமீபத்​தில் நியமனம் செய்​தது.

உயர்​நிலைக் குழு​வில் அமைச்​சர் அன்​பில் மகேஸ், இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன், கிரிக்​கெட் வீரர் அஸ்​வின் உள்​ளிட்ட 16 பேரும், பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழு​வில் திட்டக்குழு உறுப்​பினர் சுல்தான் அகமது இஸ்​மா​யில், விஞ்​ஞானி த.வி.வெங்​கடேஸ்​வரன் உள்​ளிட்ட 20 பேரும் உள்​ளனர். இந்​நிலை​யில், பாடத்​திட்டமாற்​றம் தொடர்​பாக சென்னை​யில் நவ.23, 24-ம் தேதிகளில்ஆலோசனை நடைபெற உள்​ளது. அமைச்​சர் அன்​பில் மகேஸ் தலைமை வகிக்கிறார். இதில்பங்​கேற்க குழு உறுப்பினர் கள் அழைக்கப்பட்​டுள்ளனர். தற்​போதைய காலச் சூழலுக்கு ஏற்ப பல்​வேறு புதிய தொழில்​நுட்​பங்​கள், தகவல்​களை பாடத்​தில் சேர்க்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக தெரி​கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.