WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 7, 2026

பேராசிரியர்கள் பதவி உயர்வு நிறுத்தம் பல்கலை பதிவாளர் மீது குற்றச்சாட்டு.

 

பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு ஆணையை, காழ்ப்புணர்ச்சி காரணமாக, பல்கலை பதிவாளர் நிறுத்தி வைத்துள்ளதாக, சென்னை பல்கலை ஆசிரியர் பேரவை குற்றம்சாட்டி உள்ளது.

சென்னை பல்கலையில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு நேர்காணல், பல்கலை வளாகத்தில், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்தது. அதற்கு, சிண்டிகேட் ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதில், தேர்வான பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வு ஆணை வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

தணிக்கை உட்பட பல்வேறு காரணங்களை கூறி, பதவி உயர்வு ஆணை வழங்குவதை, பல்கலை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக, அரசின் தலைமை செயலருக்கு, பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக, தேசிய பட்டியலின ஆணைய தலைவர், பல்கலை வளாகத்தில் நேரடியாக விசாரணை நடத்தினார். அதன் பிறகும், பல்கலை பதிவாளர் பதவி உயர்வு ஆணையை வழங்காமல், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக, சென்னை பல்கலை ஆசிரியர் பேரவை குற்றம்சாட்டி உள்ளது.

பதிவாளரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, வரும் 9ம் தேதி முதல், பல்கலை வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும், ஆசிரியர் பேரவை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.