WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 7, 2026

பொதுத்தேர்வில் நேர சலுகை குறித்து தேர்வுத் துறை விளக்கம்.

 

அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு தேர்​வுத் துறை இயக்​குநர் க.சசிகலா அனுப்​பிய சுற்​றறிக்கை: பொதுத்தேர்வு எழுதும் மாற்​றுத் திற​னாளி மாணவர்​களுக்கு வழக்​கத்​தை​விட கூடு​தலாக ஒரு மணி நேரம் சலுகை வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதே​நேரம் அந்த மாணவர்​கள் கூடு​தல் ஒரு மணி நேரம் சலுகையை பயன்​படுத்த விரும்​ப​வில்லை எனில் அதற்கு அனு​ம​திக்க வேண்​டும்.

அதாவது, வழக்​க​மான தேர்வு நேர​மான 3 மணி நேரம் (காலை 10.15 முதல் மதி​யம் 1.15 மணி வரை) முடிந்த பின்​னர் மாற்​றுத் திற​னாளி​கள் தங்​கள் விருப்​பத்​தின்​படி தேர்வு அறையை விட்​டுச் செல்​லலாம். அதற்​கான படிவத்​தில் பூர்த்​தி​செய்து கையொப்​பமிட வேண்​டும்.

அந்த படிவங்​களை தொகுத்து அனைத்து தேர்​வு​களும் முடிந்​ததும், சம்​பந்​தப்​பட்ட மாவட்ட தேர்​வுத் துறை உதவி இயக்​குநர் அலு​வல​கத்​தில் ஒப்​படைக்க முதன்​மைக் கண்​காணிப்​பாளர்​களுக்கு அறி​வுறுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.