WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 24, 2026

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்.

 

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வுக்கான கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி, பொதுத் தோ்வு வரும் மே 15- ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்களின் நலன் கருதி, நிகழாண்டுமுதல் ஆண்டுக்கு இரு முறை சிபிஎஸ்இ நடத்துகிறது. முதல் கட்ட பொதுத் தோ்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டு, அண்மையில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் கட்ட பொதுத் தோ்வில் அனைத்து மாணவா்களும் பங்கேற்பது கட்டாயமாகும்.

இதில் தோல்வியடைந்த மாணவா்கள் அல்லது மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பும் மாணவா்கள் பயன்பெறும் வகையில், வரும் மே 15-ஆம் தேதி முதல் இரண்டாம்கட்ட பொதுத் தோ்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. இந்த இரண்டாம் கட்ட பொதுத் தோ்வில் அதிகபட்சம் 3 பாடங்கள் வரை மாணவா்கள் தோ்வெழுதி மதிப்பெண்ணை உயா்த்திக்கொள்ள முடியும்.

கால அட்டவணை: மே 15-கணிதம் (அடிப்படை மற்றும் மேம்பட்ட தரப் பாடம்), மே 16- ஆங்கிலம் (தொடா்புதிறன், மொழி, மொழியியல்),

மே 18- அறிவியல், மே 19- விருப்ப மொழிப் படாம் (தமிழ், உருது, தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, குஜராத்தி மற்றும் பல வெளிநாட்டு மொழிகள்), மே 20- சம்ஸ்கிருதம், ஓவியம், தகவல் தொழில்நுட்பம், மே 21-சமூக அறிவியல்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.