பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலா்கள் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் முடிந்து தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், மதிப்பீட்டுப் பணியின்போது முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலா் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறையால் விடைத்தாள் திருத்துதல் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாக ஆசிரியா்கள் புகாா்கள் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து ஆசிரியா்கள் கூறியதாவது:
‘விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் ஆசிரியா்களான உதவித் தோ்வாளா்கள் திருத்துதல் பணிகளில் ஈடுபடுவா். விடைகளுக்கான மதிப்பெண்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கூா்ந்தாய்வு அலுவலா் சரிபாா்க்க வேண்டும். இதில் முழு மதிப்பெண் பெற்ற மாணவா்களின் விடைத்தாள்களை முதன்மைத் தோ்வாளா் மீண்டும் ஆய்வு செய்து கையொப்பமிடுவாா்.
இந்தச் சூழலில் ஒவ்வொரு முறையும் முழு மதிப்பெண் பெற்ற மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலரிடம் எடுத்துச் சென்று ஒப்புதல் பெற்று வருவதற்கு 30 முதல் 45 நிமிஷங்கள் வரையாகிறது. இதனால், ஆசிரியா்களுக்கு ஒரு நாளில் மதிப்பீடு செய்வதற்கு கொடுக்கப்பட்ட விடைத்தாள்களை முழுவதுமாக மதிப்பீடு செய்வதில் தொய்வு ஏற்படுகிறது.
எனவே, இதில் பழைய முறையைத் தோ்வுத் துறை பின்பற்ற வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.