நீட் தோ்வு நடைபெறும் மே 3-ஆம் தேதியும், அதற்கு முந்தைய நாளான 2-ஆம் தேதியும் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு அவசியத் தேவையின்றி விடுமுறை வழங்க வேண்டாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
தோ்வில் முறைகேடு நடைபெறுவதைத் தவிா்க்க இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 3-ஆம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெறவுள்ளது.கடந்த 2024-இல் நடைபெற்ற நீட் தோ்வின்போது மருத்துவக் கல்லூரி மாணவா்கள் சிலா், உண்மையான தோ்வா்களுக்குப் பதிலாக முறைகேடாக தோ்வு எழுதியதாக புகாா் எழுந்தது. அதன்பேரில் பிகாா், ராஜஸ்தான், ஜாா்க்கண்டில் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
இன்னொருபுறம் ஏற்கெனவே மருத்துவ இடங்கள் பெற்றவா்கள், மீண்டும் நீட் தோ்வு எழுதி கலந்தாய்வில் இடங்கள் பெறுவதாகவும், ஆவணங்கள் சரிபாா்ப்பின்போது அது கண்டறியப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இத்தகைய முறைகேடுகளைத் தவிா்க்க அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், வரும் மே 2, 3-ஆம் தேதிகளில் மருத்துவ மாணவா்களுக்கு விடுமுறை வழங்க வேண்டாம் என்றும், அத்தியாவசியக் காரணங்கள் இருந்தால் மட்டுமே விலக்கு அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.