WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, May 9, 2026

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.20% மாணவர்கள் தேர்ச்சி: 2,639 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் பெற்று சாதனை.

 

 தமிழகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழு​திய 7.92 லட்​சம் மாணவ, மாணவி​களில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். வழக்​கம்​போல, மாணவி​களே முன்​னிலை​யில் உள்​ளனர்.

489 அரசுப் பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 2,639 பள்​ளி​கள் 100 சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன. தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் இந்த ஆண்​டுக்​கான பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை 3,412 தேர்வு மையங்​களில் நடை​பெற்​றது. பதிவு செய்த 7 லட்​சத்து 99,528 மாணவ, மாணவி​களில் 7 லட்​சத்து 91,654 பேர் தேர்வு எழு​தினர். 7,874 பேர் (0.98%) பங்​கேற்​க​வில்​லை.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறி​வித்​த​படி, சென்னை டிபிஐ வளாகத்​தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு​களை பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​திரமோகன் நேற்று காலை 9.30 மணிக்கு வெளி​யிட்​டார். தொடர்ந்​து, தேர்​வுத் துறை இணை​யதளத்​தி​லும் முடிவு​கள் வெளி​யிடப்​பட்​டன. மாணவர்​களின் செல்​போன் எண்ணுக்கு குறுஞ்​செய்​தி​யாக​வும் (எஸ்​எம்​எஸ்), பள்​ளி​களுக்கு மின்​னஞ்​சலிலும் மதிப்​பெண்​களு​டன் தேர்வு முடிவு விவரங்​கள் அனுப்​பப்​பட்​டன. முதல்​முறை​யாக வாட்​ஸ்​அப் மூல​மாக​வும் தேர்வு முடிவு​களை அறிந்து கொள்ள ஏற்​பாடு செய்யப்பட்டிருந்தது.

தேர்வு எழு​தி​ய​தில் 7 லட்​சத்து 53,694 பேர் (95.20%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர். கடந்த ஆண்​டை​விட (95.03%) இது 0.17 சதவீதம் அதி​கம். மாணவி​கள் 97 சதவீத​மும், மாணவர்​கள் 93.19 சதவீத​மும் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். தேர்ச்சி விகிதத்​தில் மாணவர்​களை​விட மாணவி​கள் 3.81 சதவீதம் அதி​கம். கடந்த 2013 முதல் தொடர்ந்து தேர்ச்சி விகிதத்​தில் மாணவி​களே முன்​னிலை வகிக்​கின்​றனர்.

அரசுப் பள்ளி மாணவர்​கள் 1,695 பேர் உட்பட மொத்​தம் 16,024 பேர் ஏதேனும் ஒரு பாடத்​தில் 100 மதிப்​பெண் (‘சென்​டம்’) பெற்​றுள்​ளனர். மாவட்ட அளவி​லான தேர்ச்​சி​யில் 98.87 சதவீதத்​துடன் ஈரோடு முதலிடம் பெற்​றுள்​ளது. சிவகங்கை (98.05%), கன்​னி​யாகுமரி (97.63%) மாவட்​டங்​கள் அடுத்த 2 இடங்​களில் உள்​ளன. கடைசி இடத்​தில் விழுப்​புரம் (85.92%) உள்​ளது. தலைநகர் சென்​னை​யில் தேர்ச்சி சதவீதம் 95.43 ஆக உள்​ளது. அரசுப் பள்​ளி​கள் பிரி​விலும் ஈரோடு (98.24%) மாவட்​டம் முதலிடத்​தில் உள்​ளது. சிவகங்கை (96.97%), திருச்சி (96.55%) அதற்​கடுத்த 2 இடங்​களைப் பிடித்​துள்​ளன. விழுப்​புரம் (82.10%) மாவட்​டம் கடைசி இடத்​தில் உள்​ளது. இத்​தேர்​வில் 7,536 பள்​ளி​களைச் சேர்ந்த மாணவ, மாணவி​கள் தேர்வு எழு​தினர். இதில் 489 அரசுப் பள்​ளி​கள் உட்பட 2,639 பள்​ளி​கள் நூறு சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன.

தனி​யார் பள்​ளி​களின் தேர்ச்சி கடந்த 2023-ல் 99.08%, கடந்த 2024-ல் 98.70%, கடந்த 2025-ல் 98.88% என்று இருந்த நிலை​யில் தற்​போது 98.72% ஆக குறைந்​துள்​ளது. அதே​நேரம், அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்​டை​விட சற்று உயர்ந்​துள்​ளது.

25,521 தனித் தேர்​வர்​களில் 6,171 பேர் (24%) மட்​டுமே தேர்ச்சி பெற்​றனர். 8,855 மாற்​றுத்திறன் மாணவர்​களில் 6,811 பேர் (76.92%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர். கடந்த ஆண்​டை​விட (93.20%) இது 16.28% குறைவு. 250 சிறைக் கைதி​களில் 238 பேர் (95.20%) தேர்ச்சி பெற்​றுள்ளனர். பிளஸ் 1 வகுப்​பில் தனித் தேர்​வர்​களாக 20,444 பேர் தேர்வு எழு​தி​ய​தில் 8,491 பேர் (41.53%) தேர்ச்சி பெற்​றுள்​ளனர்.

தேர்​வுத் துறை இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) தற்​காலிக மதிப்​பெண் பட்​டியல் மே 13-ம் தேதி வெளி​யிடப்​படு​கிறது. மாணவர்​கள் தாங்​கள் படித்த பள்​ளி​கள் வாயி​லாக​வும், தனித் தேர்​வர்​கள் தேர்வு மைய தலைமை ஆசிரியர்​கள் மூல​மாக​வும் மதிப்​பெண் பட்​டியலை பெற்​றுக் கொள்​ளலாம். அசல் மதிப்​பெண் சான்​றிதழ் ஜூன் மாதம் வழங்​கப்​படும். விடைத்​தாள் நகல் கோரி மே 12 முதல் 16-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்.

ஜூனில் துணைத் தேர்வு: பொதுத் தேர்வு எழுத முடி​யாதவர்​கள், தேர்​வில் வெற்றி வாய்ப்பை தவற​விட்​ட​வர்​கள் இந்த கல்வி ஆண்​டிலேயே உயர்​கல்​வியைத் தொடர ஏது​வாக, ஜூன் 29 முதல் ஜூலை 7-ம் தேதி வரை துணைத் தேர்வு நடத்​தப்பட உள்​ளது. இதற்கு மே 18 முதல் ஜூன் 2-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம். மறும​திப்​பீடு, மறுகூட்​டல் கோரி ஜூன் 5 முதல் 8-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று தேர்​வுத் துறை தெரி​வித்​துள்​ளது.

கட்​ஆஃப் குறை​யும்: பொறி​யியல் மாணவர் சேர்க்​கைக்கு பிர​தான​மான கணிதம், இயற்​பியல், வேதி​யியல் பாடங்​களில் மாணவர்​களின் தேர்ச்சி கடந்த ஆண்​டை​விட சற்று குறைந்​துள்​ளது. தவிர, முழு மதிப்​பெண் (‘சென்​டம்’) பெற்​றவர்​களின் எண்​ணிக்​கை​யும் குறைந்​துள்​ளது. கடந்த 2025-ல் வேதி​யியல் 3,181, கணிதம் 3,022, இயற்​பியல் 1,125 பேர் என ‘சென்​டம்’ பெற்ற நிலை​யில், தற்​போது வேதி​யியல் 632, கணிதம் 732, இயற்​பியல் 105 பேர் என குறைந்​துள்​ளது

இதனால், கடந்த ஆண்​டுடன் ஒப்​பிடும்​போது கட்​ஆஃப் 180-200 பிரி​வில் 2 முதல் 4 வரை​யும், 160-179 பிரி​வில் 6 முதல் 8 வரை​யும் மதிப்​பெண் குறை​யும். இதுத​விர, நீட் தேர்வு தேவைப்​ப​டாத கால்​நடை மருத்​து​வம் போன்ற இதர மருத்​து​வப் படிப்​பு​களுக்​கும் கட்​ஆஃப் மதிப்​பெண் கணிச​மாக குறை​யும் என்று கூறப்​படு​கிறது.

மாணவர்​களுக்கு மனநல ஆலோ​சனை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களின் மன உறுதி, மனநலனைக் காக்கும் வகையில் தமிழக அரசின் ‘நட்புடன் உங்களோடு’ திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ‘டெலி கவுன்சலிங்’ தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் தயங்காமல் ‘14416’ அல்லது ‘104’ ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறையின் ‘14417’ என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.