WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 15, 2026

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு.

 

தமிழகத்​தில் அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​களுக்கு அகவிலைப்​படி 2 சதவீதம் உயர்த்​தப்​படு​வ​தாக முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மக்​கள் நலனை முன்​னிறுத்தி பல்​வேறு நலத்​ திட்​டங்​களை செயல்​படுத்த நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இந்த திட்​டங்​களை வடிவ​மைத்​து, அவற்றை முழு​வீச்​சில் நடை​முறைப்​படுத்​து​வ​தில் அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​கள் முக்​கியப் பங்கு வகிக்​கின்​றனர். இந்த நிலையில், மத்​திய அரசுப் பணி​யாளர்​களுக்கு அகவிலைப்​படி கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 2 சதவீத​ம் உயர்த்​தப்​பட்​டது.

அதைத் ​தொடர்ந்து, மாநில அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​களும் பயன்​பெறும் வகை​யில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்​கிட்டு அகவிலைப்​படியை உயர்த்தி வழங்க உத்​தர​விடப்​பட்டுள்​ளது. அதன்​படி, தற்​போது 58 சதவீத​மாக உள்ள அகவிலைப்​படி 2 சதவீதம் உயர்ந்து இனி 60 சதவீத​மாக வழங்​கப்​படும்.

16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இதன்மூலம் சுமார் 16 லட்​சம் அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​கள், ஓய்​வூ​தி​ய​ர்கள், குடும்ப ஓய்​வூ​தி​யர்​கள் பயன்​பெறு​வார்​கள். இதனால், ஆண்​டுக்கு ரூ.1,230 கோடி தமிழக அரசுக்கு கூடு​தல் செல​வினம் ஏற்​படும்.

அரசு அலு​வலர்​கள், ஆசிரியர்​கள் நலன்​கருதி இதற்​கான கூடு​தல் நிதியை அரசு ஒதுக்​கீடு செய்​யும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. தமிழ்​நாடு அரசு ஊழியர் அலு​வலர் ஒன்​றி​யத்​தின் தலை​வர் த.அமிர்​தகு​மார், தமிழ்​நாடு அரசு ஊழியர்​கள் ஆசிரியர்​கள் நல கூட்​டமைப்பு தலை​வர் சா.அருணன், தமிழக ஆரம்​பப்​பள்ளி ஆசிரியர் சங்​க பொதுச்​ செய​லா​ளர் ஜான் வெஸ்​லி, தமிழ்​நாடு ஆசிரியர் சங்​கத் தலை​வர் ராமஜெ​யம் உள்​ளிட்ட பல்​வேறு சங்​கத்தினர் இந்த அறி​விப்பை வரவேற்று, நன்​றி தெரி​வித்​துள்​ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.