WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 18, 2026

கல்வி உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ்அப் வாயிலாக மோசடி அழைப்புகள்: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை.

பள்ளி மாணவர்​களுக்கு அரசின் சார்​பில் கல்வி உதவித்​தொகை வழங்​கு​வ​தாகக் கூறி, வாட்​ஸ் அப் அழைப்​பு​கள் வாயி​லாக மோசடிகள் நடை​பெற்று வரு​வ​தால், பெற்​றோர் அதை நம்பி ஏமாற வேண்​டாம் என, பள்​ளிக் கல்​வித் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கோடை விடு​முறை முடிவடைந்து அனைத்து பள்​ளி​களும் ஜூன் 4-ம் தேதி திறக்​கப்​பட்​டு, தொடர்ந்து வகுப்​பு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அரசு மற்​றும் அரசு உதவி பெரும் பள்​ளி​களில் முதல் நாளிலே மாணவர்​களுக்கு பாடப் புத்​தகம், நோட்​டு, சீருடை உள்​ளிட்ட நலத் திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், பள்​ளிக் கல்​வித் துறை​யின் பெயரை தவறாக பயன்​படுத்தி சிலர் உதவித் தொகை என்ற பெயரில், பெற்​றோரிடம் மோசடி​யில் ஈடு​பட்டு வரு​வ​தாகத் தெரிய வந்​துள்​ளது.

பள்​ளி​களில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பெற்​றோரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்​ளும் மர்ம நபர்​கள், உங்​கள் குழந்தை ரூ.50 ஆயிரம் உதவித் தொகை பெற தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இதைப் பெற ரூ. 18 ஆயிரம் முன் பணமாக செலுத்த வேண்​டும். இத்​தொகை பின்​னர் திருப்பி அளிக்​கப்​படும் என தெரிவிக்​கின்​றனர்.

அதன் பிறகு, பெற்​றோரின் வாட்​ஸ்​அப் எண்​ணுக்கு க்யூ ஆர் ஸ்கேன் குறி​யீட்டை அனுப்பிவைத்​து, அதன் மூலம் பணம் செலுத்​த​மாறு கூறுகின்​றனர். மேலும், பெற்​றோரை நம்ப வைப்​ப​தற்​காக ஏற்​க​னவே உதவித் தொகை பெற்​ற​தாகக் கூறி சில பெற்​றோர்​களுக்கு அனுப்​பிய ஸ்கீரின் ஷாட்டை போலி​யாக அனுப்பி வைக்​கின்​றனர்.

இதை உண்மை என நம்​பும் சில பெற்​றோர், சம்​பந்​தப்​பட்ட எண்​களுக்கு பணத்தை அனுப்பி வைக்​கின்​றனர். பின்​னர், பணம் செலுத்​திய ஓரிரு நாள்​களில் அவர்​களது வங்​கிக் கணக்​கில் உள்ள மொத்​தத் தொகை​யை​யும் மர்ம நபர்​கள் தங்​களது வங்​கிக் கணக்​குக்கு மாற்றி உள்​ளனர்.

இதுகுறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ``இது​போன்ற மோசடி கடந்த 2023-ம் ஆண்டு முதல் இருந்து வரு​கிறது. பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில், உதவித் தொகை வழங்​கு​வதற்​காக பெற்​றோர்​களிடம் யாரும் தொடர்பு கொள்​வ​தில்​லை.

பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை, சமூக நலத்​துறை என அந்​தந்த நலத்​துறை சார்​பில், மாணவர்​களின் வங்​கிக் கணக்​குக்கு நேரடி​யாக கல்வி உதவித் தொகை செலுத்​தப்​படு​கிறதே தவிர, கூகுள் பே, போன் பே போன்​றவற்​றின் மூலம் அனுப்​பப்​படு​வ​தில்​லை.

இது தொடர்​பாக வரும் அழைப்​பு​கள், குறுஞ்​செய்​தி​களை பெற்​றோர் நம்ப வேண்​டாம். கடந்த காலங்​களில் இது​போன்ற மோசடிகளில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது காவல் துறை​யில் புகார்​கள் அளிக்​கப்​பட்டு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. எனவே, மோசடி நபர்​களிடம் ஏமாறாமல் பெற்​றோர் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்" என தெரி​வித்​தனர்.

வேலை​நாள் 210 ஆக குறைப்பு இதற்​கிடையே, பள்​ளிக் கல்​வித் துறை வெளி​யிட்ட 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நாட்​காட்​டி​யின்​படி, பள்ளி வேலை​நாட்​கள் 210 ஆக குறைக்​கப்​பட்​டுள்​ளது. முந்​தைய நாட்​காட்​டி​யில் வேலை​நாள் 220 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது.

மேலும், புதிய நாட்​காட்டி அறி​விப்​பின்​படி, அனைத்து சனிக்​கிழமை​களும் முழு விடு​முறை நாட்​களாக இருக்​கும். இந்த நாட்​காட்டி அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு மட்​டும் பொருந்​தும் என பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.

வெயில், மழை காரண​மாக பள்​ளி​களுக்கு விடு​முறை விடப்​படும் சூழலில், அதை ஈடு​செய்ய சனிக்​கிழமை வேலை நாளாக அறிவிக்​கப்​படு​வது வழக்​கம். அது​போன்ற எதிர்​பாரா விடு​முறையை ஈடு​செய்ய சனிக்​கிழமை வேலை​நாளாக இருக்​குமா அல்​லது இருக்​காதா என்​பது பற்​றி புதி​ய நாட்​காட்​டி​யில்​ எது​வும்​ குறிப்​பிடப்​படவில்​லை.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.