WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 22, 2014

பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: தேர்வுக்கூட நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 27ந் தேதி,
ஒருங்கிணைந்த பொறியாளர் பணியில் அடங்கிய பல்வேறு உதவிப்
பொறியாளர் பதவிகளில் உள்ள 98 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துகிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமானwww.tnpscexams.netவெளியிடப்பட்டுள்ளது.
நுழைவுச்சீட்டு மேற்படி இணையதளத்தில் இல்லாவிடில், அவ்விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின்(செல்லான்) நகலுடன், பெயர், பதிவு எண், கட்டணம் செலுத்திய அஞ்சலகம் அல்லது வங்கியின் முகவரி ஆகியவற்றை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.comக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.