கல்வியியல் படிப்பு(பி.எட்.,) அடுத்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக்கப்படுவது உறுதியாகியுள்ளதால், இப்படிப்பில் இந்த ஆண்டு
சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் படிப்புகளில், இரண்டு ஆண்டுகளை கொண்ட ஆசிரியர் பயிற்சி, ஓராண்டு பி.எட்., எனும் கல்வியியல் கல்வி உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.
மூன்றாண்டுகளுக்கு குறைவாக உள்ளதால் இப்படிப்புகள் பட்டயப்படிப்பாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் கல்வியியல் படிப்பை அடுத்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மாணவர்களின் கல்வி கற்கும் திறன், கல்வியால் பெற்ற அவர்களின் அறிவுத்திறன் ஆகியவை மத்திய அரசால் நுண்ணிய ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மாணவர்களின் அறிவுத்திறன் மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. எனவே கல்வி கற்பித்துத் தரும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படிதான் கடந்த மூன்றாண்டுகளாக ஆசிரியர் பயிற்சி முடித்திருந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முன்னுரிமையில் இருந்தாலும், தகுதித் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட் டது. அடுத்த கல்வியாண்டு முதல் கல்வியியல் கல்வியின் பயிற்று காலத்தை இரண்டு ஆண்டுகளாக்கும் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த கல்வியாண்டு மட்டும்தான் ஓராண்டு கொண்ட கல்வியியல் படிப்பு இருக்கும், என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படிப்பு செலவினங்கள், கால விரயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கல்வியியல் கல்விக்கு இந்த கல்வியாண்டில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக காற்றாடிய பல கல்வியியல் கல்லூரிகளிலும் தற்போது மாணவ மாணவிகள் கூட்டம் அலைமோதுகிறது. இக்கல்லூரிகளில் அட்மிஷனும் அனைத்து கல்லூரிகளிகளிலும் நிறைவடைந்து வருகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.